புதுச்சேரி

மாணவர் ஹரிஷ் ராகவேந்திரனை ஆல்பா கல்வி குழுமங்களின் இயக்குனர் தனதியாகு பாராட்டிய காட்சி.

ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் சாதனை

Published On 2022-12-16 08:18 GMT   |   Update On 2022-12-16 08:18 GMT
  • காரைக்காலில் 39-வது மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இதில் 15 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவிலும், 17 வயதுக்குட்பட்ட இரட்டையர் பிரிவிலும், புதுவை ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஹரிஷ் ராகவேந்திரன் கலந்து கொண்டு முதல் இடத்தை பிடித்தார்.
  • இவர் அகில இந்திய அளவில் 15 வயதுக்குட்பட்ட பிரிவில் 13-வது இடத்திலும் 17 வயதுக்குட்பட்ட இரட்டையர் பிரிவில், 12-வது இடத்திலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி:

காரைக்காலில் 39-வது மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இதில் 15 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவிலும், 17 வயதுக்குட்பட்ட இரட்டையர் பிரிவிலும், புதுவை ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஹரிஷ் ராகவேந்திரன் கலந்து கொண்டு முதல் இடத்தை பிடித்தார்.

இதன் மூலம் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற உள்ள தேசிய அளவிலான ஆண்கள் இரட்டையர் பிரிவில் விளையாட புதுவை மாநிலம் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் அகில இந்திய அளவில் 15 வயதுக்குட்பட்ட பிரிவில் 13-வது இடத்திலும் 17 வயதுக்குட்பட்ட இரட்டையர் பிரிவில், 12-வது இடத்திலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழ்நாடு மாநில அளவிலான போட்டிகளிலும் கலந்து கொண்டு முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். மாணவர் ஹரிஷ் ராகவேந்திரனை ஆல்பா கல்வி குழுமங்களின் இயக்குனர் தனதியாகு பொன்னாடை போர்த்தியும், இனிப்புகள் வழங்கியும் பாராட்டினார். 

Tags:    

Similar News