புதுச்சேரி

மக்கள் சந்திப்பு கூட்டத்தில் ஆனந்தா நகர் பகுதி மக்கள் சபாநாயகர் ஏம்பலம் செல்வத்திடம் மனு அளித்த காட்சி.

அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உறுதி

Published On 2022-08-07 03:23 GMT   |   Update On 2022-08-07 03:23 GMT
  • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் மக்கள் சந்திப்பு கூட்டம் நேஷனல் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
  • மின்விளக்குகள் மற்றும் தாழ்வான நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும்

புதுச்சேரி:

மணவெளி தொகுதி தவளக்குப்பம் ஆனந்தா நகர் பகுதியில் தொகுதி எம்.எல்,ஏ. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் மக்கள் சந்திப்பு கூட்டம் நேஷனல் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஆனந்த நகர் பகுதியை சேர்ந்த மக்கள் அந்த பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளான கழிவுநீர் வாய்க்காலுடன் கூடிய சாலை, தெரு மின்விளக்குகள் மற்றும் தாழ்வான நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக சபாநாயகர் ஏம்பலம் செல்வத்திடம் வழங்கினர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட சபாநாயகர் ஆனந்தா நகர் பகுதியில் மக்கள் வைத்த கோரிக்கை தொடர்பாக உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு இப்பகுதி அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க ஆலோசனை நடத்தினார். பின்னர் அப்பகுதி மக்களிடம் இந்த பகுதியில் அனைத்து சாலைகளையும் கழிவு நீர் வாய்க்காலுடன் கூடிய சிமெண்ட் சாலையாக அமைத்து தருவதோடு அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தி தருவதாக உறுதி அளித்தார்.

இந்த கூட்டத்தில் அப்பகுதி குடியிருப்போர் நல்வாழ்வு சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் 100-கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News