புதுச்சேரி

கோப்பு படம்.

மாநில அந்தஸ்து எதிர்ப்பு கருத்தை வாபஸ் பெற- அ.தி.மு.க.கோரிக்கை

Published On 2023-01-20 13:56 IST   |   Update On 2023-01-20 13:56:00 IST
  • மத்தியில் தேசிய கட்சிகளான காங்கிரஸ்-பா.ஜனதா எப்போது ஆட்சியில் இருந்தாலும் புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குவதில் பாரபட்சமாக நடந்துகொள்கிறது.
  • மாநில அந்தஸ்து இல்லாததால் பட்ஜெட்டை கூட வடிவமைக்க முடிய வில்லை. தனியாக தேர்வு வாரியம் இல்லை.

புதுச்சேரி:

புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்தியில் தேசிய கட்சிகளான காங்கிரஸ்-பா.ஜனதா எப்போது ஆட்சியில் இருந்தாலும் புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குவதில் பாரபட்சமாக நடந்துகொள்கிறது. புதுவைக்கு மாநில அந்தஸ்து மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். இந்நிலையில் புதுவை மாநில பா.ஜனதா தலைவர் மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக ஒரு குழப்பதை ஏற்படுத்தும் வகையில் இருவேறு கருத்துக்களை கூறியது தவறானது.

மாநில அந்தஸ்து இல்லாததால் பட்ஜெட்டை கூட வடிவமைக்க முடிய வில்லை. தனியாக தேர்வு வாரியம் இல்லை. மத்திய அரசின் அடிமை ஆட்சி போல புதுவை மாநில நிர்வாகம் உள்ளது. நமது மாநிலத்தை மத்திய நிதிக்குழுவில் சேர்க்கவில்லை. திட்டங்களை விரைவாக செயல்படுத்தவும், சட்ட மன்றத்தில் அறிவிப்புகளை செயல்படுத்தவும் மாநில அந்தஸ்து அவசியம். மாநில அந்தஸ்து இல்லாததால் துறைமுக விரிவாக்கம் கிடப்பில் உள்ளது.

பஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. பல விஷயங்களில் நமது மாநிலம் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே பா.ஜனதா தனது கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மாநில அந்தஸ்து அ.தி.மு.க.வின் பிரதான கொள்கை முடிவு. புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சட்டமன்ற உறுப்பி னர்களை டெல்லிக்கு அழைத்து சென்று பிரதமர் உள்ளிட்டவர்களை சந்தித்து வலியுறுத்த ஆக்கப்பூ ர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை முதல்-அமைச்சர் கூட்ட வேண்டும். அப்போது குறைந்தபட்ச செயல்திட்டங்களை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News