புதுச்சேரி
கோப்பு படம்.
புதிய நர்சிங் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை
- மாணவர்களைக் கொண்டு புதிய நர்சிங் கல்லூரி தொடங்க ஒப்புதல் அளித்துள்ளார்.
- 40 மாணவர்களுடன் தொடங்கவும் கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் தமிழிசை முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுவையில், நடப்புக் கல்வி ஆண்டில் பெருந்தலைவர் காமராஜர் மருத்துவக் கல்லூரி குழுமத்தின்கீழ் நர்சிங் கல்லூரி தொடங்க அனுமதி வழங்கியுள்ளார். செவிலியர் கல்லூரி, இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனம் என்ற பெயரில் 60 மாணவர்களைக் கொண்டு புதிய நர்சிங் கல்லூரி தொடங்க ஒப்புதல் அளித்துள்ளார்.
மேலும் காரைக்கால் பகுதியில் சுகாதாரத் துறையின் மூலம் நர்சிங் கல்லூரி, அன்னை தெரசா பட்டமேற்படிப்பு - சுகாதார அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் என்ற பெயரில் 40 மாணவர்களுடன் தொடங்கவும் கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.