புதுச்சேரி

கோப்பு படம்.

குற்றச்சாட்டுக்கு உள்ளானஅதிகாரிகள் மீது நடவடிக்கை

Published On 2023-05-22 06:43 GMT   |   Update On 2023-05-22 06:43 GMT
  • மக்கள் வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்தல்
  • அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் இடமாற்றம் செய்ய வேண்டும்.

புதுச்சேரி:

மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகன்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை அரசு துறைகளில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் மற்றும் இடைநிலை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு மற்றும் புகார் எழுந்தால் அத்தகைய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் இடமாற்றம் செய்ய வேண்டும்.

கலால் துறை அதிகாரி, இந்து அறநிலையத்துறை ஆணையர், சுற்றுலா வளர்ச்சி கழக மேலாளர், வேளாண் துறை இயக்குனர், சட்டத்துறை அதிகாரி, அமுதசுரபி உயரதிகாரி ஆகியோர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும், புகார்களும், பொது மக்கள் மற்றும் ஊழியர்கள் மூலமாக அரசுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் பகிரங்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அதிகாரிகள் மீது அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News