புதுச்சேரி

கோப்பு படம்

சினிமா தியேட்டர் ஊழியருக்கு அரிவாளால் வெட்டு

Published On 2022-08-11 08:08 GMT   |   Update On 2022-08-11 08:08 GMT
  • ஊழியரை அரிவாளால் வெட்டிய வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
  • சினிமா தியேட்டரில் கேண்டீன் பொறுப்பாளராக வேலை செய்து வருகிறார்.

புதுச்சேரி:

புதுவையில் சினிமா தியேட்டருக்குள் புகுந்து ஊழியரை அரிவாளால் வெட்டிய வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

புதுவை திலாஸ்பேட்டை கருணாஜோதி வீதியை சேர்ந்தவர் ரஞ்சித்(வயது26). இவர் புதுவை திருவள்ளுவர் சாலையில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் கேண்டீன் பொறுப்பாளராக வேலை செய்து வருகிறார்.

நேற்று இரவு இவர் சினிமா தியேட்டரில் பணியில் இருந்த போது திலாஸ்பேட்டை கருணாஜோதி வீதியை சேர்ந்த முகேஷ் கண்ணன் மற்றும் சுரேந்தர் ஆகியோர் போன் செய்து சினிமா தியேட்டர் வாசலுக்கு வருமாறு அழைத்தனர். அதன்படி ரஞ்சித் சினிமா தியேட்டர் வாசலுக்கு வந்தார்.

அப்போது முகேஷ் கண்ணன் மற்றும் சுரேந்தர் ஆகியோர் ரஞ்சித்திடம் உனது தாய் எங்களை திட்டுகிறார். அதற்கு ரஞ்சித் வீட்டுக்கு வந்து விசாரிப்பதாக கூறிக்கொண்டு இருக்கும் போது சுரேந்தர் தகாத வார்த்தைகளால் திட்டி ரஞ்சித்தை தாக்க முயன்றார்.

இதனால் பயந்து போன ரஞ்சித் அவர்களிடமிருந்து தப்பி செல்ல முயன்றார். ஆனால், ரஞ்சித்தை தப்பி செல்ல முடியாதவாறு முகேஷ்கண்ணன் அவரை பிடித்துக்கொண்டார். பின்னர் சுரேந்தர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ரஞ்சித்தை வெட்ட முயன்றார். இதனை தடுத்த போது ரஞ்சித்தின் வலது கையில் வெட்டு விழுந்தது.

இதனால் வலியால் ரஞ்சித் அலறியதால் சினிமா தியேட்டர் ஊழி யர்கள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் திரண்டு வரவே முகேஷ் கண்ணனும், சுரேந்தரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதையடுத்து ரஞ்சித்தை அவரது நண்பர்கள் சிகிச்சைக்காக புதுவை அரசுஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்ற ரஞ்சித் பின்னர் இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முகேஷ் கண்ணன் மற்றும் சுரேந்தர் ஆகிய 2பேரையும் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News