புதுச்சேரி
கோப்பு படம்
- புதுவையில் ஆயிரத்து 841 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
- புதுவையில் 70, காரைக்காலில் 22, மாகியில் 7 பேர் என புதிதாக 99 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுச்சேரி:
புதுவையில் ஆயிரத்து 841 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் புதுவையில் 70, காரைக்காலில் 22, மாகியில் 7 பேர் என புதிதாக 99 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 15, காரைக்கால், ஏனாமில் தலா ஒருவர் என 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 861, காரைக்காலில் 161, ஏனாமில் 34, மாகியில் 3 பேர் என ஆயிரத்து 59 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர்.
புதுவையில் 195, காரைக்காலில் 55, ஏனாமில் 3, மாகியில் ஒருவர் என 254 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 965 ஆக உள்ளது.
புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 17 லட்சத்து 97 ஆயிரத்து 380 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.