புதுச்சேரி
- புதுவை மாநிலத்தில் ஆயிரத்து 154 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
- புதுவையில் 43 பேரும், காரைக்காலில் 9 பேரும், ஏனாமில் 7 பேரும் இதில் அடங்குவர்.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் ஆயிரத்து 154 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 59 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுவையில் 43 பேரும், காரைக்காலில் 9 பேரும், ஏனாமில் 7 பேரும் இதில் அடங்குவர். மாகியில் தொற்று பாதிப்பு இல்லை. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 9 பேர் மருத்துவமனையிலும், 692 பேர் வீட்டு தனிமையிலும் என ஒட்டு மொத்தமாக 701 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இன்று 85 பேர் குணமடைந்துள்ளனர். இதில் 84 பேர் புதுவையையும், ஒருவர் காரைக்காலையும் சேர்ந்தவர்கள்.
புதுவையில் இதுவரை 1 லட்சத்து 71 ஆயிரத்து 628 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, இதில் 1 லட்சத்து 68 ஆயிரத்து 960 பேர் குணமடைந்துள்ளனர், 1967 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இத்தகவலை சுகாதா ரத்துறை தெரிவித்துள்ளது.