புதுச்சேரி

கோப்பு படம்

புதுச்சேரியில் 54 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2022-07-11 08:47 GMT   |   Update On 2022-07-11 08:47 GMT
  • புதுவையில் 804 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
  • இதில் புதுவையில் 45, காரைக்காலில் 6, ஏனாமில் 3 பேர் என புதிதாக 54 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுச்சேரி:

புதுவையில் 804 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் 45, காரைக்காலில் 6, ஏனாமில் 3 பேர் என புதிதாக 54 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 4, காரைக்காலில் 1, ஏனாம் 3, மாகியில் ஒருவர் என 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுவையில் 691, காரைக்காலில் 119, ஏனாமில் 23, மாகியில் ஒருவர் என 834 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர்.

புதுவையில் 6, காரைக்கா லில் 29, ஏனாமில் 7 பேர் என 42 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.

மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது. புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 17 லட்சத்து 56 ஆயிரத்து 183 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா நெறி முறைகளை தொடரவும், அனைவரும் முக கவசம் அணியவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Tags:    

Similar News