புதுச்சேரி

உறை கிணற்றை வரலாற்று ஆய்வாளர் ஆய்வு செய்த காட்சி.

400 ஆண்டு பழமையான உறைகிணறு கண்டுபிடிப்பு

Published On 2023-10-07 08:35 GMT   |   Update On 2023-10-07 08:35 GMT
  • 500 ஆண்டுக்கு முன் இறந்தவர்களை இந்த உறையில் போட்டு புதைக்கப்படுவது வழக்கம்.
  • தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டால்தான் எந்த காலத்துக்கு உரியது என தெரியவரும் என்றார்.

புதுச்சேரி:

புதுவையை அடுத்த வில்லியனூர் தொண்ட மாநத்தம் பகுதியில் ஆண்டனி என்பவர் தலைமையில் இளைஞர்கள் காலையில் நடைபயிற்சி மேற்கொண்டனர்.

அப்போது ஆற்றுப்பகுதி யில் மண் சரிந்து பானை ஓடுகள் போல அடுக்கி வைக்கப்பட்ட உறை கிணறு ஒன்று தென்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், வரலாறு ஆய்வாள ரிடம் தெரிவித்தனர். வரலாறு ஆய்வாளர் இதுகுறித்து கூறும்போது, 500 ஆண்டுக்கு முன் இறந்தவர்களை இந்த உறையில் போட்டு புதைக்கப்படுவது வழக்கம்.

அப்போது இந்த பகுதி யில் உறைகளை புதைத்த இடம் தற்போது ஏரியாக இருக்கலாம். இதுகுறித்து தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டால்தான் எந்த காலத்துக்கு உரியது என தெரியவரும் என்றார்.

இந்த இடத்தை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அரசு அறிவித்து, ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News