கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்யப்பட்ட காட்சி.
கஞ்சா விற்ற சிறுவன் உட்பட 4 பேர் கைது
- புதுவை அருகே அரியாங்குப்பம் பகுதியில் கஞ்சா பழக்கம் அதிகமாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை சோதனை செய்த போது அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் வைத்து இருப்பது தெரிய வந்தது.
புதுச்சேரி:
புதுவை அருகே அரியாங்குப்பம் பகுதியில் கஞ்சா பழக்கம் அதிகமாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இரவு வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை சோதனை செய்த போது அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் வைத்து இருப்பது தெரிய வந்தது.
உடனடியாக அறியாங்குப்பம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் ரெட்டியார் பாளையம் பகுதியை சேர்ந்த கணபதி வயது (24) என்பது தெரிய வந்தது.
மேலும் விசாரணை நடத்தியதில் கணபதி அரியாங்குப்பம் அடுத்த பி.சி.பி. நகர் பகுதியில் உள்ள விசுவா (வயது 22) என்பவரிடம் காஞ்சா வாங்கியதாகவும், விஷ்வா வீட்டில் வைத்து விற்பனை செய்வதாக தெரிவித்திருந்தார்.
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர். முத்துக்குமார் தலைமையிலான போலீசார் விஸ்வா வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்தனர்.
இவருக்கு துணையாக அங்கு இருந்த தினகரன் (வயது 22), 17 வயது கொண்ட சிறுவன் ஆகிய 4பேரையும் கைது செய்தனர்.