- அரசு பள்ளி அருகே கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
- பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
புதுச்சேரி:
அரசு பள்ளி அருகே கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம், மணவெளி ஆர்.கே. நகரில் அரசு பள்ளி அருகே மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்றுக்கொண்டிருந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் பூரணாங்குப்பம் நடுத்தெருவை சேர்ந்த அரவிந்தன்(வயது20), உருவைாறு புதுநகரை சேர்ந்தவர் நாகபிரபு(21) மற்றும் தவளக்குப்பம் இளவரசன் நகரை சேர்ந்த அனந்தராமன்(22) என்பதும். இவர்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.