புதுச்சேரி
கோப்பு படம்

புதுவையில் பள்ளிகளுக்கு 26-ந் தேதி விடுமுறை

Published On 2023-08-22 11:11 IST   |   Update On 2023-08-22 11:11:00 IST
  • எல்.டி.சி, ஸ்டோர் கீப்பர் நிலை-3 பணியிடத்துக்கான எழுத்து தேர்வு வருகிற 27-ந்தேதி நடக்கிறது.
  • 4 பிராந்தியங்களிலும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையால் தேந்தெடுக்கப்பட்ட பள்ளியில் நடைபெறவுள்ளது.

புதுச்சேரி:

புதுவை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 எல்.டி.சி, ஸ்டோர் கீப்பர் நிலை-3 பணியிடத்துக்கான எழுத்து தேர்வு வருகிற 27-ந்தேதி 4 பிராந்தியங்களிலும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையால் தேந்தெடுக்கப்பட்ட பள்ளியில் நடைபெறவுள்ளது.

தேர்வுக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்காக வருகிற 26-ந்தேதி (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

எழுத்து தேர்வு சுமூகமாக நடைபெற அனைத்து பள்ளிகளின் தலைவர்களும் தங்களால் முயன்ற உதவிகளை செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News