புதுச்சேரி

கோப்பு படம்

கஞ்சா விற்ற 2 வாலிபர் கைது

Published On 2022-07-01 05:19 GMT   |   Update On 2022-07-01 05:19 GMT
  • உழவர்கரையில் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
  • ஒரு வங்கி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரெட்டியார் பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

புதுச்சேரி:

உழவர்கரையில் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

புதுவை உழவர்கரை சிவகாமி நகரில் 3-வது குறுக்குத்தெருவில் ஒரு வங்கி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரெட்டியார் பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் மற்றும் போலீசார் அப்பகுதியில் சாதாரண உடையில் நின்று கண்காணித்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் சட்டைப்பையில் சோதனை நடத்திய போது சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா வைத்திருந்தனர். மொத்தம் 315 கிராம் கஞ்சாவை அவர்கள் சட்டைப்பையில் பதுக்கி வைத்திருந்தனர்.

இதை தொடர்ந்து அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அவர்கள் உழவர்கரை-வில்லியனூர் மெயின் ரோட்டை சேர்ந்த விமல் (வயது24) மற்றும் பூத்துறை பகுதியை சேர்ந்த பாரத் (24) என்பதும். இவர்கள் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News