புதுச்சேரி

கோப்பு படம்.

புதுவையில் 2 கைதிகள் விடுதலை- நமச்சிவாயம் தகவல்

Published On 2022-10-21 14:39 IST   |   Update On 2022-10-21 14:39:00 IST
  • புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் கைதி களை நன்னடத்தை அடிப்படையில் விடு தலை செய்வது தொடர் பான ஆலோசனைக் கூட் டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது.
  • கூட்டத்தில், நன்ன டத்தையில் உள்ள 27 கைதிகளின் விடுதலை தொடர்பான கோப்புகள் ஆலோசனைக் குழுவின் முன் வைக்கப்பட்டது.

புதுச்சேரி:

புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் கைதி களை நன்னடத்தை அடிப்படையில் விடு தலை செய்வது தொடர் பான ஆலோசனைக் கூட் டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது.

உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை யில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், புதுச்சேரி தலைமை நீதிபதி செல் வநாதன், தலைமைச் செயலர் ராஜிவ் வர்மா, சட்டத்துறை செயலர் கார்த்திகேயன் டிஜி.பி., ஆனந்தமோகன், சிறைத்துறை ஐ.ஜி ரவி தீப் சிங் சாகர், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு, நாரா சைதன்யா, போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுகுமார், சிறைத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், நன்ன டத்தையில் உள்ள 27 கைதிகளின் விடுதலை தொடர்பான கோப்புகள் ஆலோசனைக் குழுவின் முன் வைக்கப்பட்டது. குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் 14 ஆண் டிற்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் 12. கைதிகளின் விடுதலை குறித்து விவாதிக்கப்பட்டத

சிறை கைதிகள் பற் றிய விபரங்கள், அவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டு வழக்குகள், அவர்களை விடுதலை செய்வதால் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் குறித்தும் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து 2 கைதிகள் மட்டும் விடுவிக்க முடிவு செய்து கோப்பு முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டது கவர்னரின் ஒப்புதலை பெற்று, உள் துறை அமைச்சர் வாயிலாக கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர்.

Tags:    

Similar News