கோப்பு படம்
- பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
- மோட்டார் சைக்கிள்களில் திடீரென்று ஒரு கும்பல் வந்து இறங்கியது
புதுச்சேரி:
புதுவையில் ரவுடி கொலையில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுவை மேட்டுப் பாளையம் சண்முகாபுரம் வடக்குபாரதிபுரத்தை சேர் ந்தவர் பன்னீர்செ ல்வம் (வயது 24). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் நண்பர்கள் பாலாஜி, சத்தியவாசகன், தினேஷ்குமார் மற்றும் 4 பேருடன் தனது வீட்டில் பன்னீர் செல்வம் மது அருந்திக்கொண்டு இருந்தார்.
இரவு 10.15 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து கொண்டு இருந்த போது மோட்டார் சைக்கிள்களில் திடீரென்று ஒரு கும்பல் வந்து இறங்கியது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் பன்னீர் செல்வம் வீட்டுக்குள் புகுந்தனர்.
அவர்களை பார்த்ததும் பன்னீர்செல்வமும், அவரது நண்பர்கள் பாலாஜி, சத்தியவாசகன், திேனஷ்குமார் ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால், அதற்கு வாய்ப்பு இல்லாத வகையில் கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து 2 நாட்டு வெடிகுண்டுகளை அந்த கும்பல் வீசியது.
பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதால் அந்த பகுதியே அதிர்ந்தது.
வெடிகுண்டுகள் வெடித்த வீட்டிலும், அந்த பகுதியிலும் புகை மண்டலமானது. இதை பயன்படுத்தி தப்பி ஓட விடாமல் பன்னீர்
செல்வம், அவரது நண்பர்கள் சத்தியவாசகன், பாலாஜி, தினேஷ்குமார் ஆகியோரை அந்த கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்டித் தள்ளியது.
இதில் அவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதன்பின் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.அதன்பின் பன்னீர்செல்வம், சத்திய–வாசகன், பாலாஜி, தினேஷ்குமார் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கிருந்து மேல்சிகிச்சைக் காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அவர்கள் அனுப்பி வைக் கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பன்னீர் செல்வம் பரிதாபமாக இறந்தார்.
பாலாஜி ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சத்திய வாசகனும், தினேஷ்குமாரும் சிகிச்சை பெற்று வரு கின்றனர். பன்னீர் செல்வத்துடன் இருந்த மேலும் 4 பேர் அக்கும்பல் வெடிகுண்டு வீசும்போது தப்பி ஓடி விட்டதால் காயமின்றி தப்பினர்.
இக்கொலை தொடர்பாக சாண்டி என்கிற செந்தில் நாதன், தீவனூர் பரத், கிளியனூர் அஜித், பாரதி புரம் கனகராஜ், பூத்துறை பரத், காமராஜர் நகர் விமல்ராஜ், ரெட்டியார் பாளையம் வைசாக் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். இக்கொலை தொடர்புள்ள மேலும் சிலரை தேடி வந்தனர். இந்த நிலையில் சண்முகாபுரத்தை சேர்ந்த மூர்த்தி, யுவராஜ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.