புதுச்சேரி

கோப்பு படம்

டாக்டரை தாக்கிய 2 பேர் கைது

Published On 2022-06-26 11:35 IST   |   Update On 2022-06-26 11:35:00 IST
  • கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டரை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
  • ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்

புதுச்சேரி:

கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டரை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். புதுவை மேட்டுப் பாளையம் சாணரப் பேட்டையை சேர்ந்தவர் கலையரசன் (வயது20). பிளம்பர் வேலை செய்து வருகிறார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதனையறிந்த கலை யரசன் தன்னுடன் வேலை பார்க்கும் கதிர்காமம் பகுதியை சேர்ந்த கிரிதரன் என்பவருடன் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அப்போது கலையரசனின் காதலிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து கொண்டி ருக்கும் போது காதலியிடம் கலையரசன் கொஞ்சி பேசிக்கொண்டிருந்தார்.

இதனை அங்கு பணியில் இருந்த டாக்டர் முகமது ரில்வான்(25) கண்டித்து பணிக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த கலையரசன் டாக்டர் முகமது ரில்வானை கையால் தாக்கினார். மேலும் கலையரசனின் நண்பர் கிரிதரன் தகாத வார்த்தைகளால் டாக்டரை திட்டினார்.

இதுகுறித்து டாக்டர் முகமது ரில்வான் கோரிமேடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து கலையரசனையும், அவரது நண்பர் கிரிதரனையும் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News