புதுச்சேரி

 ராமநவமியை முன்னிட்டு 108 கிலோ சர்க்கரை அபிஷேகம் நடைபெற்ற காட்சி.

சாய் பாபாவுக்கு 108 கிலோ சர்க்கரை அபிஷேகம்

Published On 2023-03-31 05:03 GMT   |   Update On 2023-03-31 05:03 GMT
  • கோரிமேடு அருகே பட்டனூரில் உள்ள ஓம் வழி காட்டும்சாயி பாபா ஆலயத்தில் ராமநவமியை முன்னிட்டு 108 கிலோ சர்க்கரை அபிஷேகம் நடைபெற்றது.
  • பாபாவிற்கு அபிஷேகம் செய்த சர்க்கரையை அனைவரும் எறும்பு புற்றுக்கு தானம் செய்தார்கள்.

புதுச்சேரி:

கோரிமேடு அருகே பட்டனூரில் உள்ள ஓம் வழி காட்டும்சாயி பாபா ஆலயத்தில் ராமநவமியை முன்னிட்டு 108 கிலோ சர்க்கரை அபிஷேகம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து 108 சாயி பக்தர்கள் 108 முறை ராம நாமத்தை கூறினார்கள். அதை தொடர்ந்து ஓம் வழி காட்டும் சாயி பாபாவிற்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாபா பிரசாதம் வழங்கப்பட்டது. பாபாவிற்கு அபிஷேகம் செய்த சர்க்கரையை அனைவரும் எறும்பு புற்றுக்கு தானம் செய்தார்கள்.

இவ்விழா ஏற்பாடுகளை ஆலய டிரஸ்டி சாய் சசி அம்மையார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News