புதுச்சேரி
கோப்பு படம்.

108 ஆம்புலன்ஸ் சேவையை மேம்படுத்த வேண்டும் - நாம் தமிழர் கட்சி வலியுறுத்தல்

Published On 2023-09-28 08:57 GMT   |   Update On 2023-09-28 08:57 GMT
  • திருபுவனை பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது
  • இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

புதுச்சேரி:

திருபுவனை தொகுதி நாம் தமிழர் கட்சி தலைவர் ஜெயக்குமார், பொதுச்செயலாளர் முத்து குமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

திருபுவனை பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. விபத்தில் சிக்குபவர்களை மீட்டு சிகிச்சை அளிக்க ஆஸ்பத்தி ரிக்கு அழைத்துச்செல்ல 108 ஆம்புலன்ஸ் சேவை தாமதமாக வருகிறது. இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

எனவே இது போன்று உயிரிழப்புகளை தடுக்க திருபுவனை பகுதியில் 108 ஆம்புலன்ஸ் சேவையை மேம்படுத்த வேண்டும். மேலும் திருபுவனை, திருவ ண்டார் கோவில் மற்றும் மதகடிப்பட்டு பகுதியில் பொதுக்கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News