புதுச்சேரி

விளையாட்டு ஆணைய கூட்டம் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடந்த காட்சி.

புதுவை, கிராம புறங்களில் 10 மினி மைதானம் அமைக்க ஏற்பாடு

Published On 2023-06-15 06:17 GMT   |   Update On 2023-06-15 06:17 GMT
  • விளையாட்டு ஆணைய கூட்டத்தில் முடிவு
  • கிராமப்புறங்களில் விளையாட்டு மைதானம் ரூ.11 கோடியில் அமைப்பது குறித்தும் ஆலோசிக் கப்பட்டது.

புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் அமைச்சர் நமச்சிவாயம், விளையாட்டுக்களை மேம்படுத்தவும், வீரர்களை ஊக்கப்படுத்தவும் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுக்கு என தனித்துறை உருவாக்கப்படும் என அறிவித்தார்.

இதன்படி தனி துறை அமைக்க கோப்பு உருவா க்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்பு தலுக்கு அனுப்பப்பட்டது. அமைச்சரவை ஒப்புதலை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சக அனுமதி கிடைத்தவுடன் தனி துறை ஆரம்பிக்கப்பட உள்ளது. இதற்காக இயக்குனர், தனி அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.

இதனிடையே தனித்தனியே செயல்பட்டு வந்த புதுவை விளையாட்டு கவுன்சில், ராஜீவ்காந்தி விளையாட்டு பள்ளி ஆகிய வற்றை ஒருங்கிணைத்து தமிழகம்போல புதுவை விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஆணைய தலைவராக முதல்-அமைச்சர் ரங்கசாமி, துணைத்தலைவராக அமைச்சர் நமச்சிவாயம், உறுப்பினர்களாக எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ், கல்யாணசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விளையாட்டு சங்க தலைவர்கள், சர்வதேச பதக்கம் பெற்ற வீரர்கள், தொழில் கூட்டமைப்பு பிரதிநிதிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகளும் உறுப்பினர்களாக உள்ளனர்.

18 ஆண்டுக்கு பின் புதுவை விளையாட்டு கவுன்சில் கூட்டம் கல்வித்துறை வளாகத்தில் நடந்தது.

முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை வகித்தார். அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார். ஒலிம்பிக் சங்க தலைவர் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இதில் விளையாட்டுகளை மேம்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப் பட்டது. புதிய பதவிகளை உருவாக்குவது, நிதி ஒதுக்கீடு, சம்பளம் உட்பட பல விஷ யங்கள் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் தரப்பட்டது. சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்ற புதுவை விளையாட்டு வீரர்களுக்கு வழங்க வேண்டிய ஊக்கத்தொகை 2004-ம் ஆண்டிலிருந்து வழங்கப்பட வில்லை. நிலுவையில் உள்ள ரூ.7 கோடியே 93 லட்சத்து 34 ஆயிரத்தை வழங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கான தொகையை ஒதுக்கித்தர முதல்-அமைச்சர் ஒப்புதல் அளித்தார்.

தேசிய போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு நிதியுதவி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் விளையாட்டு மைதானம் ரூ.11 கோடியில் அமைப்பது குறித்தும் ஆலோசிக் கப்பட்டது.

உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் அரங்கத்தை முழுமையாக புதுப்பிக்க முடிவு செய்யப் பட்டது. லாஸ்பேட்டை யில் தரை அமைத்து பணிகளை முழுமையாக்கவும், ஸ்கேட்டிங் வீரர்களுக்கு தனி பாதை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் புதுவை நகரம் மற்றும் கிராமப்புறங்களில் 10 மினி மைதானங்கள் கட்ட மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் நிதி யுதவி பெற முடிவு செய்யப்பட்டது.   

Tags:    

Similar News