செய்திகள்
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில்

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆடி மாத களப பூஜை தொடங்கியது

Published On 2021-07-20 14:27 IST   |   Update On 2021-07-20 14:27:00 IST
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆடிமாதம் நடைபெறும் களப பூஜையும் தொடங்கியது. இந்த களப பூஜை வருகிற 30-ந்தேதி வரை 13 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.
குமரி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலும் ஒன்று. இந்தகோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் தொடக்கத்தில் கற்கடக ஸ்ரீபலி விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு ஆடி மாதம் தொடங்கியதையொட்டி கற்கடக ஸ்ரீபலி விழா நடைபெற்றது.

இதையொட்டி கோவிலில் நடைபெறும் நித்திய காரியபூஜைகள் முடிந்த பின் மாலை 6-30 மணிக்கு மேல் ரி‌ஷப வாகனத்தில் சிவபெருமானையும் கருட வாகனத்தில் பெருமாளையும் எழுந்தருளச்செய்து கோவிலை சுற்றிலும் 3 முறை ஸ்ரீபலி நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து ஆடிமாதம் நடைபெறும் களப பூஜையும் தொடங்கியது. இந்தகளப பூஜை வருகிற 30-ந்தேதி வரை 13 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதையொட்டி தினமும் காலை நடைபெறும் வழி பாடுகள் அனைத்தும் நிறைவடைந்த பின்னர் 10 மணிக்கு தாணுமாலய சாமி சன்னதியில் களப பூஜை நடை பெறுகிறது. நறுமணங்கள் கலந்த சந்த னத்தை அரைத்து தாணு மாலயசாமிக்கு அபிஷே கமும் அதைத் தொடர்ந்து அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் செல்வ ராஜ் தலைமையில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் மேலாளர் சண்முகம் பிள்ளை செய்து வருகிறார்.

Similar News