செய்திகள்
அழகர் கோவில்

அழகர் கோவில் ஆடி பெருந்திருவிழா: பக்தர்களுக்கு அனுமதி இல்லை

Published On 2021-07-16 14:29 IST   |   Update On 2021-07-16 14:29:00 IST
அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் இன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என்று அழைக்கப்படும் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானது மதுரை மாவட்டம், அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் ஆகும்.

ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆடிப் பெருந்திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.

கொரோனா பரவல் காரணமாக திருவிழாக்கள் நடைபெற தடை உள்ளது. இதன் காரணமாக ஆடி பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள் அழகர் கோவில் உள் பிரகாரத்தில் பக்தர்களின்றி நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

11 நாட்கள் நடைபெறும் ஆடி பெருந்திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக இன்று கொடியேற்றம் காலை 7.15 மணிக்கு நடந்தது.

கொரோனா பரவல் காரணமாக காலை 9 மணிக்கு மேல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் இன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொடியேற்ற நிகழ்வின் போது கள்ளழகர் என்ற சுந்தர ராஜப் பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவியர்களுடன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

கொடியேற்ற நிகழ்ச்சியின் போது பக்தர்கள் அனுமதிப்படாததால் அதிகாலை முதலே அழகர் கோவிலில் குவிந்தனர்.

கோட்டைவாசல் முன்பு நீண்ட நேரம் காத்திருந்து நிகழ்ச்சிகள் முடிந்தபின் பக்தர்கள் தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

Similar News