செய்திகள்
திருப்பதி

திருப்பதியில் ஆனி வார ஆஸ்தானம்: ஏழுமலையானிடம் ஆண்டு வரவு, செலவு கணக்கு சமர்ப்பிப்பு

Published On 2021-07-16 13:21 IST   |   Update On 2021-07-16 13:21:00 IST
மாலை 6 மணிக்கு வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட பல்வேறு வகையான பூக்கள் கொண்டு வடிவமைக்கப்பட்ட புஷ்பப் பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் புஷ்பப் பல்லக்கில் பவனி வருகிறார்.
திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆனி மாத கடைசி நாளன்று ஆனி வர ஆஸ்தானம் நடைபெறுவது வழக்கம். ஆனி வார ஆஸ்தானத்தையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள் மற்றும் பூமாலைகள் கொண்டு செல்லப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டன.

இன்று காலை 7 மணி முதல் 9 மணிக்குள் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பட்டு வஸ்திரங்கள் மற்றும் பூ மாலைகள் அணிவிக்கப்பட்டன.

9 மணிக்கு கடந்த ஆண்டு கோவிலுக்கு உண்டான வரவு, செலவு கணக்குகள் ஏழுமலையான் முன்பு சமர்ப்பிக்கப்பட்டன.

மாலை 6 மணிக்கு வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட பல்வேறு வகையான பூக்கள் கொண்டு வடிவமைக்கப்பட்ட புஷ்பப் பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் புஷ்பப் பல்லக்கில் பவனி வருகிறார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் தேர் பவனியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மட்டும் தேர் பவனியில் கலந்து கொண்டனர்.

Similar News