செய்திகள்
பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் தேர்விழா ரத்து
புதுவை மாநிலம் வில்லியனூரை அடுத்த பிள்ளையார்குப்பத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் இந்த ஆண்டு நடைபெறவிருந்த தேர் திருவிழா உள்ளிட்ட அனைத்து விழாக்களும் தடை செய்யப்பட்டுள்ளது.
புதுவை மாநிலம் வில்லியனூரை அடுத்த பிள்ளையார்குப்பத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது.
ஊடங்கு சித்திரை மாதம் பவுர்ணமியில் தேர் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவுவதை தடுக்கவும், மக்களை பாதுகாக்கவும் பொது நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் நடத்த இந்து அறநிலையத்துறை தடை விதித்துள்ளது.
எனவே இந்த ஆண்டு நடைபெறவிருந்த தேர் திருவிழா உள்ளிட்ட அனைத்து விழாக்களும் தடை செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வீட்டில் இருந்த படியே கூத்தாண்டவர் சுவாமியின் அருளை பெறும்படி அறங்காவலர் குழு தெரிவித்துள்ளது.
ஊடங்கு சித்திரை மாதம் பவுர்ணமியில் தேர் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவுவதை தடுக்கவும், மக்களை பாதுகாக்கவும் பொது நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் நடத்த இந்து அறநிலையத்துறை தடை விதித்துள்ளது.
எனவே இந்த ஆண்டு நடைபெறவிருந்த தேர் திருவிழா உள்ளிட்ட அனைத்து விழாக்களும் தடை செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வீட்டில் இருந்த படியே கூத்தாண்டவர் சுவாமியின் அருளை பெறும்படி அறங்காவலர் குழு தெரிவித்துள்ளது.