செய்திகள்
ஏழுதிரைகளை விலக்கி வடலூர் சத்திய ஞானசபையில் தைப்பூச ஜோதி தரிசனம்
தைப்பூச விழாவின் சிகர நிகழ்ச்சியான தை பூச ஜோதி தரிசன நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதன்படி காலை 6 மணிக்கு 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் வடலூரில் சத்திய ஞானசபையை வள்ளலார் நிறுவினார். இங்கு ஆண்டுதோறும் தை மாதத்தில் வரும் பூசநட்சத்திரத்தன்று தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு 149-வது தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 5 மணிக்கு அகவல் பாராயணம் பாடப்பட்டது. 7.30 மணிக்கு தருமச்சாலை சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது.
இதையடுத்து வள்ளலார் பிறந்த மருதூரில் உள்ள அவரது இல்லத்திலும், வள்ளலார் தண்ணீரால் விளக்கு எரிய செய்த கருங்குழியிலும் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டன. விழாவின் சிகர நிகழ்ச்சியான தை பூச ஜோதி தரிசன நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதன்படி காலை 6 மணிக்கு 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.
இதில் அமைச்சர் எம்.சி.சம்பத் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு ஜோதி தரிசனம் செய்தார். மேலும் மாவட்ட அரசு உயர் அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதேபோல் காலை 10 மணிக்கும், மதியம் 1 மணிக்கும் 7 திரைகளையும் விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. கடலூர், விழுப்புரம், திருச்சி, திருவண்ணாமலை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து ஜோதி தரிசனம் செய்தனர்.
மேலும் இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் காலை 5.30 மணிக்கு 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. ஜோதி தரிசன விழாவில் தமிழகம் மட்டுமின்றி நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் தலைமையில் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் ஊர்காவல் படையினர், சிறப்பு காவல் படையினர், போக்குவரத்து போலீசார் ஆகியோர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் சத்தியஞான சபை வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராவை வைத்தும், பல்வேறு இடங்களிலும் கட்டுபாட்டு அறைகள் அமைத்தும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வடலூர் தைப்பூச திருவிழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், மதுரை, விழுப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
வள்ளலார் சபை வளாகத்தில் தற்காலிக பஸ்நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. ஜோதி தரிசன விழாவை காண வரும் சன்மார்க்க அன்பர்கள் தங்குவதற்கு தேவையான இட வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன. விழாவை காண வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வடலூரில் ஜோதி தரிசன விழாவை கடலூர் மாவட்ட பொதுமக்கள் காணும் வகையில் கடலூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டது.
அதன்படி இந்த ஆண்டு 149-வது தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 5 மணிக்கு அகவல் பாராயணம் பாடப்பட்டது. 7.30 மணிக்கு தருமச்சாலை சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது.
இதையடுத்து வள்ளலார் பிறந்த மருதூரில் உள்ள அவரது இல்லத்திலும், வள்ளலார் தண்ணீரால் விளக்கு எரிய செய்த கருங்குழியிலும் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டன. விழாவின் சிகர நிகழ்ச்சியான தை பூச ஜோதி தரிசன நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதன்படி காலை 6 மணிக்கு 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.
இதில் அமைச்சர் எம்.சி.சம்பத் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு ஜோதி தரிசனம் செய்தார். மேலும் மாவட்ட அரசு உயர் அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதேபோல் காலை 10 மணிக்கும், மதியம் 1 மணிக்கும் 7 திரைகளையும் விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. கடலூர், விழுப்புரம், திருச்சி, திருவண்ணாமலை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து ஜோதி தரிசனம் செய்தனர்.
மேலும் இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் காலை 5.30 மணிக்கு 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. ஜோதி தரிசன விழாவில் தமிழகம் மட்டுமின்றி நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் தலைமையில் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் ஊர்காவல் படையினர், சிறப்பு காவல் படையினர், போக்குவரத்து போலீசார் ஆகியோர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் சத்தியஞான சபை வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராவை வைத்தும், பல்வேறு இடங்களிலும் கட்டுபாட்டு அறைகள் அமைத்தும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வடலூர் தைப்பூச திருவிழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், மதுரை, விழுப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
வள்ளலார் சபை வளாகத்தில் தற்காலிக பஸ்நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. ஜோதி தரிசன விழாவை காண வரும் சன்மார்க்க அன்பர்கள் தங்குவதற்கு தேவையான இட வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன. விழாவை காண வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வடலூரில் ஜோதி தரிசன விழாவை கடலூர் மாவட்ட பொதுமக்கள் காணும் வகையில் கடலூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டது.