செய்திகள்

மழை வேண்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வருண யாகம்

Published On 2019-05-08 06:56 GMT   |   Update On 2019-05-08 06:56 GMT
மழை வேண்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதியில் வருண யாகம் நடந்தது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது. இதற்கிடையில் கடந்த 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் வெயில் தாக்கத்தை குறைக்கவும், மழை வேண்டியும் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் வருண யாகம் போன்ற பூஜைகள் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று காலை கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதியில் வருண யாகம் நடந்தது.

மழை வேண்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பிரம்ம தீர்த்தத்தில் வருண யாகம் நடந்தது.

இதைத் தொடர்ந்து பிரம்ம தீர்த்த குளத்தில் மார்பளவு தண்ணீரில் இறங்கி சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கி யாக தண்ணீரை பிரம்ம தீர்த்தத்தில் தெளித்தனர்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


Tags:    

Similar News