செய்திகள்

காஞ்சீபுரத்தில் அகத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2018-11-12 14:29 IST   |   Update On 2018-11-12 14:29:00 IST
காஞ்சீபுரத்தில் அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அகத்தீஸ்வரர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
காஞ்சீபுரம் அடுத்த பாலுச்செட்டிசத்திரம் கிளார் கிராமத்தில் அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்து வழிபட்ட அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் கண்ட ராதித்ய சோழன் தளபதி வீரசேனன் வழிபட்டதாக வரலாறு உள்ளது.

பழமை வாய்ந்த இக்கோவிலை புனரமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேகம் நடந்தது.

இதையொட்டி கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை சிறப்பு யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

கும்பாபிஷேக விழாவில் காஞ்சீபுரம் பாலுச்செட்டிசத்திரம் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News