செய்திகள்
காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்
உலக பிரசித்திபெற்ற காமாட்சி அம்மன் கோவிலில் இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதில் லட்சக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
உலக பிரசித்திபெற்ற காமாட்சி அம்மன் கோவிலில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பணிகள் முடிவடைந்து இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 3-ந்தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து கணபதி ஹோமம், சதுர் வேத சமர் பணம், கன்யா பூஜை, சுவாசினி பூஜைகள் நடந்தது.
இன்று காலை 7-ம் கால யாக சாலை பூஜையும் ஹோம மும் மஹா பூர்ணாஹீதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் யாகசாலைகளில் இருந்து கோவிலின் பரம்பரை ஸ்தானீகர்கள் தலையில் சுமந்து வேத மந்திரங்கள், மங்கல வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
கோவிலின் ராஜகோபுரம் உள்ளிட்ட 4 கோபுரங்களிலும் மற்றும் மூலஸ்தானத்தின் மேல் அமைந்துள்ள தங்ககோபுரம், ஆதிசங்கரர் சன்னதிக்கு மேல் உள்ள தங்க கோபுரம் ஆகியவற்றில் காஞ்சீபுரம் சங்கராசாரியார்கள் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவிலின் உள்ளேயும் வெளியேயும் திரண்டிருந்த பக்தர்கள் மீது மின்சார மோட்டார் உதவியுடன் புனிதநீர் தெளிக்கப்பட்டது. கோவிலை சுற்றிலும் ஏராளமான இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்சியில் திருக்கோயிலின் ஸ்ரீகார்யம் சல்லா விஸ்வநாத சாஸ்திரி, ஸ்ரீமடத்தின் ஸ்ரீகார்யம் விஸ்வநாத அய்யர், காமாட்சி அம்மன் கோயில் புனரமைப்பு பணிக்குழு தலைவர் சிவ் நாடார், சேர்மன் ஏ.சி. முத்தையா மற்றும் திருப்பணி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் காஞ்சீபுரம் காந்தி சாலையில் அமைந்துள்ள வழக்கறுத்தீசுவரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.
புதியதாக 3 நிலைகளை கொண்டு அமைக்கப்பட்ட ராஜகோபுரத்திற்கும் அதன் பின்னர் மூலவருக்கும் சிவாச் சாரியார்களால் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இதனை தொடர்ந்து சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
காஞ்சீபுரம் நகரில் அமைந்துள்ள பிரசித்திபெற்றது. கோவில்களின் கும்பாபி ஷேகங்கள் இன்று ஒரே நாளில் நடைபெற்றதால் நகரின் முக்கிய சாலைகள் அனைத்திலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
காமாட்சி அம்மன் கோவிலில் முன்னதாக 1995-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று இருந்தது. தற்போது ரூ. 35 கோடி செலவில் கோவில் புரனமைக்கப்பட்டு 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
வடக்கு மண்டல ஐ.ஜி. செந்தாமரைகண்ணன், டி.ஐ.ஜி. நஜ்மல் ஹோடா உத்தரவின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி தலைமையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
உயரமான இடங்களில் போலீசார் பைனாகுலர் மூலம் மக்கள் கூட்டத்தை கண்காணித்தனர். கோவில்களை சுற்ற நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிக சி.சி. டி.வி. கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 3-ந்தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து கணபதி ஹோமம், சதுர் வேத சமர் பணம், கன்யா பூஜை, சுவாசினி பூஜைகள் நடந்தது.
இன்று காலை 7-ம் கால யாக சாலை பூஜையும் ஹோம மும் மஹா பூர்ணாஹீதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் யாகசாலைகளில் இருந்து கோவிலின் பரம்பரை ஸ்தானீகர்கள் தலையில் சுமந்து வேத மந்திரங்கள், மங்கல வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
கோவிலின் ராஜகோபுரம் உள்ளிட்ட 4 கோபுரங்களிலும் மற்றும் மூலஸ்தானத்தின் மேல் அமைந்துள்ள தங்ககோபுரம், ஆதிசங்கரர் சன்னதிக்கு மேல் உள்ள தங்க கோபுரம் ஆகியவற்றில் காஞ்சீபுரம் சங்கராசாரியார்கள் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவிலின் உள்ளேயும் வெளியேயும் திரண்டிருந்த பக்தர்கள் மீது மின்சார மோட்டார் உதவியுடன் புனிதநீர் தெளிக்கப்பட்டது. கோவிலை சுற்றிலும் ஏராளமான இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்சியில் திருக்கோயிலின் ஸ்ரீகார்யம் சல்லா விஸ்வநாத சாஸ்திரி, ஸ்ரீமடத்தின் ஸ்ரீகார்யம் விஸ்வநாத அய்யர், காமாட்சி அம்மன் கோயில் புனரமைப்பு பணிக்குழு தலைவர் சிவ் நாடார், சேர்மன் ஏ.சி. முத்தையா மற்றும் திருப்பணி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் காஞ்சீபுரம் காந்தி சாலையில் அமைந்துள்ள வழக்கறுத்தீசுவரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.
புதியதாக 3 நிலைகளை கொண்டு அமைக்கப்பட்ட ராஜகோபுரத்திற்கும் அதன் பின்னர் மூலவருக்கும் சிவாச் சாரியார்களால் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இதனை தொடர்ந்து சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
காஞ்சீபுரம் நகரில் அமைந்துள்ள பிரசித்திபெற்றது. கோவில்களின் கும்பாபி ஷேகங்கள் இன்று ஒரே நாளில் நடைபெற்றதால் நகரின் முக்கிய சாலைகள் அனைத்திலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
காமாட்சி அம்மன் கோவிலில் முன்னதாக 1995-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று இருந்தது. தற்போது ரூ. 35 கோடி செலவில் கோவில் புரனமைக்கப்பட்டு 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
வடக்கு மண்டல ஐ.ஜி. செந்தாமரைகண்ணன், டி.ஐ.ஜி. நஜ்மல் ஹோடா உத்தரவின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி தலைமையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
உயரமான இடங்களில் போலீசார் பைனாகுலர் மூலம் மக்கள் கூட்டத்தை கண்காணித்தனர். கோவில்களை சுற்ற நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிக சி.சி. டி.வி. கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.