செய்திகள்

ஹரிஸ் சோஹைல் பட்லரை போன்று அதிரடியாக விளையாடினார்- சர்பராஸ் அகமது புகழாரம்

Published On 2019-06-24 11:45 GMT   |   Update On 2019-06-24 11:45 GMT
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஹரிஸ் சோஹைலின் ஆட்டம் பட்லரை போன்று இருந்தது என சர்பராஸ் அகமது புகழாரம் சூட்டியுள்ளார்.
பாகிஸ்தான் - தென்ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் விளையாடிய பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் 30 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹரிஸ் சோஹைல் களம் இறங்கினார். அவர் 59 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 89 ரன்கள் குவித்தார். இதனால் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

போட்டி முடிந்த பின்னர் பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது ஹரிஸ் சோஹைல் ஆட்டம் சிறப்பாக இருந்தது என தெரிவித்தார். இதகுறித்து சர்பராஸ் அகமது கூறுகையில் ‘‘தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றி ஒரு அணியாக கூட்டு முயற்சிக்கு கிடைத்தது. தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடினார்கள். அதன்பின் ஹரிஸ் சோஹைல் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது ஆட்டம் ஜோஸ் பட்லர் ஆட்டத்தை போன்று இருந்தது.



தொடரின் தொடக்கத்தில் அணி காம்பினேசன் காரணமாக ஹரிஸ் சோஹைலுக்கு வாய்ப்பு கொடுக்க முடியவில்லை. ஆனால், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ரன்கள் குவிக்க வேண்டும் என்ற வேட்கையில் களம் இறங்கி அசத்தினார். அணியில் சோஹைல் முற்றிலும் மாறுபட்ட வீரர்’’ என்றார்.
Tags:    

Similar News