உலகம்
பாகிஸ்தானில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: இருவர் பலி, 7 பேர் படுகாயம்
- விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
- வேனில் பிரேக் செயலிழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணம் ஸ்வாட் பகுதியில் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. கபால் என்ற இடத்துக்கு அருகே வேன் சென்றபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பயங்கர விபத்துக்குள்ளானது.
மேலும், இந்த வேன் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் வேனில் பிரேக் செயலிழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.