உலகம்

துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் என தொலைபேசி மிரட்டல் - அமெரிக்க செனட் கட்டடத்தில் பரபரப்பு

Published On 2023-08-02 21:20 GMT   |   Update On 2023-08-02 21:20 GMT
  • அமெரிக்காவின் செனட் சபை கட்டட வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடக்கப்போவதாக போன் வந்தது.
  • சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் செனட் கட்டட வளாகத்தில் சோதனை நடத்தினர்.

நியூயார்க்:

அமெரிக்காவின் யு.எஸ். கேப்பிட்டோல் போலீஸ் படை அலுவலகத்தில் உள்ள 911 என்ற அவசர எண்ணிற்கு தகவல் வந்தது.

அதில், அமெரிக்காவின் செனட் சபை கட்டட வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடக்கப் போவதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செனட் கட்டட வளாகத்தில் சோதனை நடத்தினர். எந்நேரமும் துப்பாக்கிச்சூடு நடக்கலாம் என கூறப்பட்டதால் அங்கு பதற்றமும் பரபரப்பும் காணப்பட்டது.

போலீசார் நடத்திய சோதனையில் எந்த ஆயுதமும், யாரும் சிக்கவில்லை. இறுதியில் தொலைபேசியில் வந்த மிரட்டல் புரளி என தெரிய வந்தது.

Tags:    

Similar News