உலகம்

அமெரிக்க பாலத்தில் கப்பல் மோதிய விபத்து - 6 பேர் உயிரிழப்பு?

Published On 2024-03-27 03:31 GMT   |   Update On 2024-03-27 03:31 GMT
  • சரக்கு கப்பல் மோதியதில், பால்டிமோர் பாலம் நொறுங்கி விழுந்தது.
  • இந்தியாவை சேர்ந்த 22 பேர் அடங்கிய குழு இயக்கினர்.

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் பால்டிமோர் பாலம் உள்ளது. இந்த பாலம் 2.6 கிலோமீட்டர் நீளம் கொண்டது. நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு இந்த பாலத்தின் அடியில் சரக்கு கப்பல் ஒன்று துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது சரக்கு கப்பல் பாலத்தின் மோதியது.

சரக்கு கப்பல் மோதியதில், பால்டிமோர் பாலம் நொறுங்கி விழுந்தது. இந்த விபத்தில் பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்த கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின. தண்ணீரில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

 


விபத்தில் சிக்கியவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்பதால், அவர்களை மீட்கும் பணிகளை அதிகாரிகள் நிறுத்தி உள்ளனர். விபத்தில் சிக்கிய சரக்கு கப்பலை இந்தியாவை சேர்ந்த 22 பேர் அடங்கிய குழு இயக்கினர். விபத்தில் இந்திய குழுவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கப்பலில் இருக்கும் இந்திய குழு பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

எனினும், விபத்து சமயத்தில் பால்டிமோர் மேம்பாலத்தில் பணியாற்றி வந்த ஆறு பேர் காணாமல் போயுள்ளனர். இவர்கள் மேம்பாலத்தில் ஏற்பட்ட குழிகளை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

"இதுவரை நடைபெற்ற தேடுதல் முயற்சி, இங்குள்ள கடல்நீரின் வெப்பநிலை மற்றும் பல்வேறு காரணங்களை வைத்து பார்க்கும் போது, விபத்தில் சிக்கியவர்களை இனியும் உயிருடன் மீட்க முடியும் என்ற நம்பிக்கை எங்களிடம் இல்லை," என்று அமெரிக்க கடலோர காவல்படையை சேர்ந்த ஷானன் கிலரீத் தெரிவித்துள்ளார்.

"பால்டிமோரின் ஸ்காட் கீ மேம்பாலத்தில் நடைபெற்ற விபத்தில் துரதிர்ஷ்டவசமாக சிக்கி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மனமார்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இதில் பாதிக்கப்பட்ட அல்லது உதவி தேவைப்படும் இந்தியர்கள், இந்திய தூதரகத்தை +1-202-717-1996 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்," என்று அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் பதிவிட்டுள்ளது.

Tags:    

Similar News