உலகம்

எகிப்து அதிபரை சந்தித்த மந்திரி ஜெய்சங்கர்

எகிப்து அதிபர் சிசியுடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

Published On 2022-10-16 21:52 GMT   |   Update On 2022-10-16 21:52 GMT
  • இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் எகிப்துக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
  • அதிபர் அப்துலை சந்தித்த அவர் பிரதமர் மோடியின் தனிப்பட்ட செய்தியை அவரிடம் வழங்கினார்.

கெய்ரோ:

எகிப்து நாட்டுக்கு இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் கெய்ரோ சென்ற அவர் அல்-ஹொரேயா பூங்காவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார். இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்துவதில் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், எகிப்தில் அதிபர் அப்துல் பத்தா எல்-சிசியை மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று சந்தித்து பேசினார்.

இதுதொடர்பாக, மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், எகிப்து அதிபர் சிசியை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவரிடம், பிரதமர் மோடியின் தனிப்பட்ட செய்தியையும் ஒப்படைத்துள்ளேன். இந்தியா மற்றும் எகிப்து ஆகிய சுதந்திர எண்ணம் கொண்ட இரு நாடுகளும், அரசியல், சர்வதேச உறவுகள் மற்றும் சமூக கொள்கைகளில் சர்வதேச பங்காற்றி வருகின்றன. அமைதி, வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றுக்கான முகாந்திரங்களை இரு நாடுகளும் ஊக்குவித்து வருகின்றன என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News