உலகம்

பாகிஸ்தான் பாராளுமன்றம் இன்று கலைக்கப்படுகிறது

Published On 2023-08-09 11:21 IST   |   Update On 2023-08-09 11:21:00 IST
  • பாராளுமன்றத்தை கலைக்கும்படி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளேன்.
  • தேர்தல் நடத்த 90 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது.

பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் பதவிக் காலம் வருகிற 12-ந்தேதி நிறைவடையும் நிலையில் அதற்கு முன்பாக பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் பாராளுமன்றம் இன்று கலைக்கப்பட உள்ளது. பாராளுமன்றத்தை கலைக்க கோரி பிரதமர் ஷபாஸ் ஷெரீப் இன்று அதிபருக்கு கடிதம் எழுத உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, பாராளுமன்றத்தை கலைக்கும்படி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளேன். பின்னர் இடைக் கால அரசாங்கம் பொறுப் பேற்கும் என்றார்.

எதிர்க்கட்சி தலைவர் ராஜா ரியாஸ் கூறும்போது, இடைக்கால பிரதமர் யார் என்பது குறித்து ஆலோசிக்க இன்னும் பிரதமரை சந்திக்கவில்லை அல்லது என்னிடம் ஆலோசனையும் கேட்கவில்லை. இன்று கூட்டம் நடைபெறும் நம்புகிறேன். அதில் இந்த விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்றார்.

பாராளுமன்றம் முன் கூட்டியே கலைக்கப்பட்டு உள்ளதால் தேர்தல் நடத்த 90 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News