உலகம்

பாகிஸ்தானில் இந்தியாவால் தேடப்பட்ட பயங்கரவாதி மரணம்

Published On 2024-03-03 09:55 GMT   |   Update On 2024-03-03 09:55 GMT
  • சமீபகாலமாக பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்படுவது உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தது.
  • கடந்த நவம்பர் மாதம் லஷ்கர்-இ-தொய்பா தளபதி அக்ரம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானை தளமாக கொண்ட பயங்கரவாத தளபதிகளில் ஒருவர் ஷேக் ஜமீல்-உர்-ரஹ்மான்.

காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்த இவர் ஐக்கிய ஷிகாத் கவுன்சிலின் பொதுச் செயலாளர் மற்றும் தவ்ரீக்-உல்-முஜாகிதீன் அமைப்பு தலைவராக செயல்பட்டு வந்தார்.

காஷ்மீரில் நடந்த பல தாக்குதல்களில் தொடர் புடைய ஜமீல்-உர்-ரஹ்மானை, இந்திய அரசு கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் தீவிரவாதியாக அறிவித்து தேடி வந்தது.

இந்நிலையில் ஜமீர்-உர்-ரஹ்மான் பாகிஸ்தானில் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.

பாகிஸ்தானில் கைபர் பக்துள்கவா மாகாணத்தில் உள்ள அபோதாபாத்தில் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

அவர் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து உறுதியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.

சமீபகாலமாக பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்படுவது உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தது.

கடந்த நவம்பர் மாதம் லஷ்கர்-இ-தொய்பா தளபதி அக்ரம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

டிசம்பர் மாதம் கராச்சியில் லஷ்கர் தீவிரவாதி அபு ஹன்சலா மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நேற்று முன்தினம் லஷ்கர் உளவுத்துறை தலைவர் அசாம் சீமா மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News