உலகம்
பிரேசில் கலவரம் கவலை அளிக்கிறது- பிரதமர் மோடி டுவிட்டர் பதிவு
- ஜனநாயக மரபுகளை அனைவரும் மதிக்க வேண்டும்.
- பிரேசில் அதிகாரிகளுக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்கும்.
பிரேசிலில் முன்னாள் அதிபர் போல்சனாரோ ஆதரவாளர்கள் பாராளுமன்றம், அதிபர் மாளிகை மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் புகுந்து வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
பிரேசிலியாவில் அரசு நிறுவனங்களுக்கு எதிரான கலவரம் மற்றும் நாசவேலை பற்றிய செய்திகள் ஆழ்ந்த கவலையை அளித்து உள்ளது. ஜனநாயக மரபுகளை அனைவரும் மதிக்க வேண்டும், பிரேசில் அதிகாரிகளுக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.