உலகம்

பாகிஸ்தானில் வாட்ஸ்அப்பில் மத அவமதிப்பு- வாலிபருக்கு மரண தண்டனை

Update: 2023-03-26 09:40 GMT
  • சையது முகமது ஷான் என்பவர் வாட்ஸ்அப் குழுவில் மத அவமதிப்பு கருத்துக்களை பதிவிட்டதாக கைது செய்யப்பட்டார்.
  • பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் 2 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த நிலையில் அவருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

பாகிஸ்தானின் வடமேற்கு நகரான மர்தானை சேர்ந்த சையது முகமது ஷான் என்பவர் வாட்ஸ்அப் குழுவில் மத அவமதிப்பு கருத்துக்களை பதிவிட்டதாக கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு பெஷாவர் பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் 2 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த நிலையில் அவருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. சையது முகமது ஷானின் செல்போனை தடயவியல் சோதனைக்கு உட்படுத்தியதில் அவர் மத அவமதிப்பு கருத்துக்களை பதிவிட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News