உலகம்

காத்மாண்டுவில் 3.7 ரிக்டர் அளவில் நில அதிர்வு

Published On 2022-06-11 03:49 GMT   |   Update On 2022-06-11 03:49 GMT
  • கடந்த 2015-ம் ஆண்டில் ஏற்பட்ட பேரழிவு நிலநடுக்கத்தை இது நினைவூட்டுவதாக பலர் சமூக வளைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
  • இந்த சம்பவத்தில் உயிர் சேதமோ அல்லது பொருட் சேதமோ இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து கிழக்கே 15 கி.மீ தொலைவில் உள்ள பக்தபூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை 2.36 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.

இதன் எதிரொலி காத்மாண்டு பள்ளத்தாக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த சம்பவத்தில் உயிர் சேதமோ அல்லது பொருட் சேதமோ இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டில் ஏற்பட்ட பேரழிவு நிலநடுக்கத்தை இது நினைவூட்டுவதாக பலர் சமூக வளைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News