உலகம்
null

ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு சுரினாம் நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு

Published On 2023-06-05 23:54 GMT   |   Update On 2023-06-06 00:09 GMT
  • பராமரிபோ விமான நிலையத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
  • ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு திரவுபதி முர்முவின் முதல் ஐரோப்பிய பயணம் இதுவாகும்.

பராமரிபோ:

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சுரினாம் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செர்பியா ஆகிய நாடுகளுக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அவரது முதல் ஐரோப்பிய பயணம் இதுவாகும்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று விமானம் மூலமாக சுரினாம் நாட்டிற்குச் சென்றடைந்தார். அந்நாட்டின் தலைநகரான பராமரிபோவில் உள்ள ஜோஹன் அடால்ஃப் பெங்கல் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதற்கிடையே, சுரினாம் நாட்டின் அதிபர் சந்திரிகாபெர்சாத் சாந்தோகியை ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் விதமாக பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு சுரினாம் நாட்டின் உயரிய விருதான, கிராண்ட் ஆர்டர் ஆப் தி செயின் ஆப் தி யெல்லோ ஸ்டார் விருதை அந்நாட்டு அதிபர் சாந்தோகி வழங்கி கவுரவித்தார்.

அப்போது பேசிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, இந்த அங்கீகாரம் எனக்கு மட்டுமல்ல, இந்திய-சுரினாமியர் சமூகத்தின் அடுத்தடுத்த தலைமுறையினருக்கு இந்த விருதை அர்ப்பணிக்கிறேன் என தெரிவித்தார்.

Tags:    

Similar News