உலகம்

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ராக்கெட் தாக்குதல் குறித்து சைரன் எச்சரிக்கை

Published On 2023-10-15 13:53 GMT   |   Update On 2023-10-15 13:53 GMT
  • இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ராக்கெட் தாக்குதல் குறித்து சைரன் ஒலிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
  • லெபனான் உடனான வடக்கு எல்லையில் இருந்து 4 கி.மீ., வரையிலான பகுதியை இஸ்ரேல் சீல் வைத்துள்ளது.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான மோதல் இன்று 9வது நாளாக நீடித்து வருகிறது.

கடந்த 7-ம்தேதி இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் இஸ்ரேலுக்குள் ஊடுருவியும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். பலரை பிணை கைதிகளாக பிடித்து சென்றனர்.

இதையடுத்து போர் பிரகடனத்தை அறிவித்த இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசாமுனை மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. இரு தரப்பிலும் இதுவரை அப்பாவி பொதுமக்கள் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.

ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்ற பிணை கைதிகளை இஸ்ரேல் ராணுவம் மீட்டது. இதையடுத்து போர் தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் ராணுவம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. எல்லையில் 3 லட்சம் வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ராக்கெட் தாக்குதல் குறித்து சைரன் ஒலிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

காசா பகுதியில் இருந்து இஸ்ரேலின் தெற்கு மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லெபனான் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா, இஸ்ரேலிய வடக்கு எல்லைக் கிராமத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

லெபனான் உடனான வடக்கு எல்லையில் இருந்து 4 கி.மீ., வரையிலான பகுதியை இஸ்ரேல் சீல் வைத்துள்ளது.

Tags:    

Similar News