உலகம்

போர் விமான விபத்து

ரஷியாவில் சோகம் - குடியிருப்பு கட்டிடத்தின்மீது ராணுவ விமானம் மோதிய விபத்தில் 2 பேர் பலி

Published On 2022-10-17 18:31 GMT   |   Update On 2022-10-17 18:31 GMT
  • ரஷியாவில் ராணுவ போர் விமானம் ஒன்று தீப்பிடித்து குடியிருப்பு கட்டிடத்தின் மீது மோதியது.
  • இதில் 2 பேர் பலியாகினர் என மீட்புக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாஸ்கோ:

ரஷியாவின் தெற்கே எயிஸ்க் நகரில் உள்ள குடியிருப்புக் கட்டிடம் ஒன்றின்மீது ராணுவ விமானம் ஒன்று திடீரென தீப்பிடித்தபடி பறந்து வந்து மோதி விபத்திற்கு உள்ளானது. விமானத்தில் இருந்த விமானி குதித்து தப்பிவிட்டார்.

இதைத் தொடர்ந்து கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்து 9-வது தளம் வரை தீப்பற்றியது. அதனை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இதில் அனைத்து தளங்களிலும் உள்ள குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.

இந்த விபத்தில் 2 பேர் பலியானதாகவும், 15க்கும் மேற்பட்டொர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணையில், சுகோய்-34 ரக ஜெட் போர் விமானத்தின் என்ஜினில் தீப்பிடித்த நிலையில் விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.

Tags:    

Similar News