உலகம்

பிலிப்பைன்சில் 6.7 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்

Published On 2023-11-18 00:48 GMT   |   Update On 2023-11-18 00:48 GMT
  • பிலிப்பைன்சில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
  • நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

மணிலா:

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மான்டெனா தீவை மையமாகக் கொண்டு 78 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கின. இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் வெளியாகவில்லை.

நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

Tags:    

Similar News