உலகம்

பிரதமர் மோடியால் இந்திய-அமெரிக்க உறவு அடுத்த கட்டத்துக்கு செல்லும்: கமலா ஹாரிஸ் பெருமிதம்

Published On 2023-06-24 02:22 GMT   |   Update On 2023-06-24 07:41 GMT
  • நம் இரு நாடுகளும் எதிர்காலத்தை வடிவமைப்போம்.
  • நமது கூட்டு, இந்த நூற்றாண்டில் மகத்தான சாத்தியங்களை கொண்டிருக்கிறது.

வாஷிங்டன் :

பிரதமர் மோடி, அமெரிக்காவுக்கு முதல்முறையாக அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அவர் நேற்று முன்தினம் அந்த நாட்டின் பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அமெரிக்க நளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் இருமுறை பேசிய இந்தியப் பிரதமர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.

மோடியின் அமெரிக்க பயணம் குறித்து அந்த நாட்டின் துணை ஜனாதிபதியான இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் டுவிட்டரில் பெருமிதம் தெரிவித்துள்ளார். அதில் அவர், "இந்திய-அமெரிக்க கூட்டு, இதுவரை இல்லாத வகையில் வலிமையாகி உள்ளது. நாம் இன்னும் வளமான, பாதுகாப்பான, ஆரோக்கியமான உலகத்தை உருவாக்க பாடுபட்டுக்கொண்டிருப்பதால், நம் இரு நாடுகளும் எதிர்காலத்தை வடிவமைப்போம்" என கூறி உள்ளார்.

மேலும், " அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையோன கூட்டு, 21-ம் நூற்றாண்டில் மிகவும் முக்கியமானது. பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம், நமது கூட்டினை, விண்வெளியில் இருந்து ராணுவம் வரை, தொழில் நுட்பம் தொடங்கி வினியோகச்சங்கிலிகள் வரை, அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கமலா ஹாரிசுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.

அந்தப் பதிவில் அவர், " நமது கூட்டு, இந்த நூற்றாண்டில் மகத்தான சாத்தியங்களை கொண்டிருக்கிறது. நானும் நமது கூட்டுறவை எதிர்காலம் சார்ந்த துறைகளில் உயர்த்துவதில் சம அளவில் உற்சாகத்துடனும், எழுச்சியுடனும் உள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News