உலகம்

ஐ.நா. கூட்டத்தில் கதறி அழுத பாலஸ்தீனிய தூதர்: காரணம் இதுதான்

Published On 2025-05-31 01:36 IST   |   Update On 2025-05-31 01:36:00 IST
  • ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பாலஸ்தீனிய தூதர் பங்கேற்றார்.
  • காசாவின் நிலையை எடுத்துரைக்கும்போது அவர் கதறி அழுதது உருக்கத்தை ஏற்படுத்தியது.

நியூயார்க்:

இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தின் காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.

சமீபத்தில் வெளியான தகவலின்படி உணவு மற்றும் மருந்துக்கு பற்றாக்குறை இருப்பதாகவும், உணவு வாகனங்கள் செல்வதற்கு இஸ்ரேல் அனுமதி அளிக்க வேண்டும் என கோரப்பட்டது. உணவு வாகனங்கள் செல்லாவிட்டால் பல ஆயிரம் குழந்தைகள் இறக்க நேரிடும் என தகவல் வெளியானது.

இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய பாலஸ்தீனிய தூதர் ரியாத் மன்சூர், காசாவில் குண்டுவெடிப்பு, தீப்பிழம்பு, பசி, பட்டினி ஆகியவற்றின் நடுவே மக்கள் தவிப்பதாக தெரிவித்தார்.

அப்போது மனம் உடைந்து கதறி அழுத அவர், தனக்கும் பேரக் குழந்தைகள் இருக்கிறார்கள். காசா குழந்தைகளின் நிலையைப் பார்க்க முடியவில்லை. காசாவின் குழந்தைகள் அண்டை நாடுகள் உள்ளிட்ட இடங்களிலும், அகதிகள் முகாமிலும் வாழ்வதைப் பார்க்க முடியவில்லை என வேதனையுடன் தெரிவித்தார்.

Tags:    

Similar News