உலகம்
null

உலகெங்கும் மக்களின் அன்பைப் பெற்ற நீதிபதி ஃபிராங் கேப்ரியோ காலமானார்

Published On 2025-08-21 13:38 IST   |   Update On 2025-08-21 13:44:00 IST
  • கடந்த 2018 முதல் 2020 வரை அவர் விசாரிக்கும் வழக்குகள் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.
  • நீதிபதி என்பவர் தண்டனையை மட்டுமே வழங்குபவர் இல்லை.

தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் உலகெங்கும் பிரபலமான அமெரிக்காவை சேர்ந்த நீதிபதி ஃபிராங் கேப்ரியோ (88) காலமானார்.

மாநகராட்சி நீதிபதியான இவர் விசாரிக்கும் போக்குவரத்து குற்றங்கள் சார்ந்த வழக்குகள், CAUGHT IN PROVIDENCE என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்தது. உலகின் மிகவும் கனிவான, மனிதாபிமானம் கொண்ட நீதிபதி என்று பெயர் பெற்ற பிராங்க் கேப்ரியோ கணைய புற்றுநோயால் இன்று காலமானார்.

கடந்த 2018 முதல் 2020 வரை அவர் விசாரிக்கும் வழக்குகள் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. நீதிபதி என்பவர் தண்டனையை மட்டுமே வழங்குபவர் இல்லை. விதிமீறல், குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை மட்டுமே கொடுக்க கூடாது. அவர்களின் இடத்தில் இருந்தும் யோசித்து பார்த்து மன்னிப்பும் வழங்கலாம் என்பதை உலகுக்கு எடுத்து காட்டியவர்.

Tags:    

Similar News