உலகம்

நாயாக மாறிய வாலிபரின் புதிய ஆசை

Published On 2024-05-27 08:53 GMT   |   Update On 2024-05-27 09:22 GMT
  • நான் நாயில் இருந்து வேறு ஒரு விலங்காக மாற ஆசைப்படுகிறேன்.
  • பூனையும், நரியும் மிகவும் சிறியவை என்பதால் எதார்த்தத்தை உணரும் போது அது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது.

விலங்குகள் மீது சிலருக்கு அதீத அன்பு இருக்கும். அந்த வகையில் நாய்கள் மீது தீராத காதல் கொண்ட ஜப்பானை சேர்ந்த டோகோ என்ற வாலிபர் ரூ.12 லட்சம் செலவு செய்து நாயாக மாறிய காட்சிகள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன.

இந்நிலையில் டோகோ தற்போது இன்னும் சில விலங்குகள் போல தன்னை மாற்றி கொள்ள ஆசைபடுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் டோகோ கூறியிருப்பதாவது:-

நாய்களுக்கும், மனிதர்களுக்கும் வெவ்வேறு எலும்பு அமைப்புகள் இருக்கும். கால்கள், கைகளை வளைப்பது என மனிதர்களில் இருந்து நாய்கள் மிகவும் வேறுபட்டு காணப்படுகின்றன. எனவே நாய் போல நடப்பது மிகவும் கடினம். நான் தற்போது என் கை, கால்களை நாய்களை போன்று மாற்றுவதற்கு வழிகளை ஆராய்ந்து வருகிறேன். பொதுவாக நாய்கள் அசுத்தமாகும் போது அவற்றின் ரோமங்களில் அழுக்கு படிந்து வருகிறது. அதனை சுத்தம் செய்ய அதிக உழைப்பு செலுத்த வேண்டி உள்ளது.


எனவே நான் நாயில் இருந்து வேறு ஒரு விலங்காக மாற ஆசைப்படுகிறேன். அது பாண்டா அல்லது கரடி, நரி, பூனை என வேறு ஏதேனும் ஒரு விலங்கு போல மாற ஆசை உள்ளது. பூனையும், நரியும் மிகவும் சிறியவை என்பதால் எதார்த்தத்தை உணரும் போது அது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. நிச்சயம் ஏதாவது ஒரு நாள் எனது ஆசையை நிறைவேற்றுவேன் என கூறியுள்ளார்.

Tags:    

Similar News