உலகம்

அமெரிக்காவில் பரபரப்பு... போலீசார் சோதனை நடத்த சென்ற வீட்டில் குண்டு வெடித்தது

Published On 2023-12-05 12:22 IST   |   Update On 2023-12-05 12:22:00 IST
  • குண்டு வெடித்ததில் வீடு முற்றிலும் இடிந்தது.
  • வீட்டுக்குள் இருந்த நபர் உயிரிழந்தாரா? அல்லது தப்பி சென்றாரா? என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.

வாஷிங்டன்:

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனின் புறநகர் பகுதியான ஆர்லிங்டனில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். துப்பாக்கி சத்தம் கேட்ட வீட்டுக்குள் போலீசார் நுழைந்து சோதனை நடத்த முயற்சித்தனர். அப்போது வீட்டுக்குள் இருந்த நபர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

திடீரென்று அந்த வீட்டில் குண்டு வெடித்தது. பயங்கர சத்தத்துடன் பல அடி உயரத்துக்கு தீ பிழம்பு கிளம்பியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குண்டு வெடித்ததில் வீடு முற்றிலும் இடிந்தது. அங்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கடுமையாக போராடி அணைத்தனர். சோதனை நடத்த சென்ற போலீசார் அதிகாரிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

வீட்டுக்குள் இருந்த நபர் உயிரிழந்தாரா? அல்லது தப்பி சென்றாரா? என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.

குண்டு வெடித்த வீட்டில் இருந்த நபர், வெடி மருந்துகளை பதுக்கி வைத்து இருந்து போலீசார் வந்ததும் அதை வெடிக்க வைத்து இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News