உலகம்
null
China | வட கொரியாவுக்கு மீண்டும் பயணிகள் ரெயில் சேவை: சீனா அறிவிப்பு
- வட கொரியா- சீனா இடையிலான ரெயில் சேவை கொரோனா தொற்றால் நிறுத்தப்பட்டது.
- வருகின்ற வியாழக்கிழமை முதல் மீண்டும் ரெயில் சேவை தொடங்கப்படுகிறது.
வடகொரியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் பயணிகள் ரெயில் சேவை இருந்து வந்தது. கொரோனா வைரஸ் தொற்றால் இந்த சேவை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் வருகிற வியாழக்கிழமை முதல் சீனாவின் பீஜிங்கில் இருந்து வடகொரியாவின் பியாங்யாங் நகருக்கு பயணிகள் ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் என சீனா தெரிவித்துள்ளது. இநத ரெயில் வாரத்திற்கு நான்கு முறை இயக்கப்படும்.
தினசரி ரெயில் சேவை டான்டோங் என்ன சீனாவின் எல்லையோர நகரில் இருந்து பியாங்யாங்கிற்கு இயக்கப்படும் என சீனாவின் ரெயில்வே ஆணையம் தெரிவித்துள்ளது.