உலகம்
இலங்கையில் பஸ் கவிழ்ந்து பயங்கர விபத்து - 15 பேர் உயிரிழப்பு
- ஊவா மாகாணத்தில் உள்ள பதுளை மாவட்டத்தில் நடந்த பஸ் விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
- உயிரிழந்த 15 பேரில் 9 பேர் பெண்கள் ஆவர்.
இலங்கையின் ஊவா மாகாணத்தில் உள்ள பதுளை மாவட்டத்தில் நடந்த பஸ் விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
வியாழக்கிழமை இரவு, சுற்றுலா சென்று திரும்பிக்கொண்டிருந்த 30 க்கும் மேற்பட்டோர் பயணித்த பஸ் சாலையில் இருந்து விலகி பல நூறு மீட்டர் ஆழமான பள்ளத்தில் விழுந்தது.
இதில் உயிரிழந்த 15 பேரில் 9 பேர் பெண்கள் ஆவர். மேலும் காயமடைந்த 16 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.