உலகம்
வங்கதேச பொதுத் தேர்தல்: நாடு திரும்பிய தாரிக் ரகுமான் வேட்புமனு தாக்கல் செய்தார்
- 17 வருடத்திற்குப் பிறகு வங்கதேசம் திரும்பியுள்ளார்.
- இவரது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைக்க தேர்தல் ஆணையம் சம்மதம் தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி அகற்றப்பட்டது. முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 12-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 17 வருடமாக வெளிநாட்டில் (இங்கிலாந்து) தங்கியிருந்த முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மகன் தாரிக் ரகுமான் கடந்த 25-ந்தேதி தனது மனைவி, மகளுடன் நாடு திரும்பினார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது தாயாரை சென்று பார்த்தார். பின்னர், தேர்தலுக்கான வேலையில் இறங்கினார். முதற்கட்டாக தனது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைக்க பதிவு செய்தார்.
இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். டாக்கா 17 தொகுதியில் தாரிக் ரகுமான் போட்டியிடுகிறார். ரகுமான் பெயரை வாக்காளர் பட்டியலில் இணைக்க தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.